Tuesday 7 February 2017

" கிரகணதோஷம் ", 2 ஆவது பகுதி.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட ஆர்வலர்களுக்கு வணக்கம்.  " கிரகணதோஷம் ", 2 ஆவது பகுதி.  : ...  பாரம்பரிய முறை : .......  சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது, அதை நம் கண்ணால் பார்க்க முடிகிறது.  கிரகண நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனின் ஒளிக்கதிர்கள் முழுமையாக நமக்கு கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.  அந்த கதிர்கள் கூட ஒளிச்சிதறல்களாகி, ஒழுங்கற்ற முறையில் நம்மை வந்தடைகிறன.  இதனால் கெடுதல்கள் விளைகிறன.  இந்த கெடுதல்கள் எப்படிப்பட்டவை? என்று, கிரகண நேரத்தில் விண்வெளிக்கு சென்று ஆராயும் விஞ்ஞானிகள் இன்றும்கூட இருந்துகொண்டு இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அதன் ஜாதகத்தில், சூரிய சந்திரர்களுடன் நிழல்கிரகங்கள் மிக நெருக்கமான பாகை அளவில் சம்பந்தப்பட்டிருக்கும்.  சூரிய கிரகணம் என்றால், சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது ஆகிய 3 கிரகங்களும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான பாகை அளவிலிருக்கும்.  சந்திர கிரகணம் என்றால், சூரியனுக்கு சமசப்தமமாக எதிரே சந்திரன் இருக்க, சூரியனோடும், சந்திரனோடும், நிழல் கிரகங்கள் மிக நெருக்கமான பாகை அளவில் அமைந்திருக்கும்.  அறிவியலின்படி பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3ம் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்.  எனவே ஒரு ஜாதகத்தில், சூரிய சந்திரர்களுடன் நிழல்கிரகங்கள், பாகை அளவில் 3 பாகை 20 கலை [ ஒரு நக்ஷத்திர பாதம் அளவு ] அளவில் நெருங்கியிருந்தாலொழிய, ஒரே ராசியில் இருப்பதால் கிரகணதோஷம் விளையாது என்பதை புரிந்துகொள்ளலாம்.  இந்த கிரகங்கள் அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட அளவில் நெருங்கினால் கிரகணதோஷம் விளையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கிரக அமைப்பு இருந்தாலும் பல சமயங்களில் கிரகணம் விளைவதில்லை.  எனவே மேற்கண்ட கிரக அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் மட்டும் போதாது.  அந்த நேரத்தில் கிரகணமா? இல்லையா? என்று, ஜாதகர் பிறந்த வருஷத்திய பஞ்சாங்கம் கொண்டு அறிதல் அவசியமாகிறது.  அல்லது ஜோதிடர் பஞ்சாங்க கணிப்பை அறிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது.  ஆனால் பல ஜோதிடர்கள் இவற்றை தவிர்த்துவிட்டு, நிழல்கிரகத்தோடு, ஒரு கிரகம் ஒரே ராசியில் இருந்தால் கிரகணதோஷம் என்று தோஷத்திற்கான பலனை சொல்லி வருகிறார்கள்.  ஜாதகத்தை கொண்டு, தொலைனோக்கு பார்வையுடன், தன் வாழ்க்கையில் ஒரு நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் ஜாதகருக்கு, இவ்விதமாக பலன் சொல்வதால், அது அவர் வாழ்க்கையையே ஏறுக்கு மாறாக புரட்டி போட்டுவிடும்.  ஜோதிட கணிதத்தோடு, பஞ்சாங்க கணிதத்தையும் கணிக்கும் பொறுப்பும், நுணுக்கமும் போதிக்கும் அவசியம் ஏற்படுவதால், கிரகணதோஷம் பற்றிய செய்திகளை பல நூல்கள் சொல்லாமல் விட்டுவிட்டன.  ஒரு ஸ்தானத்தில் நிழல்கிரகம் இருந்தால், நிச்சயம் அந்த ஸ்தானம் பாதிப்படையும்.  எனவே சில நூல்கள் அந்த பாதிப்புகளை விவரிப்பதோடு நிறுத்திக்கொண்டன.  இனி மற்ற கிரகங்களோடு, நிழல்கிரகங்கள் எப்படி தொடர்பு கொண்டு கிரகணதோஷம் விளைவிக்கிறன? என்று விரிவாக பார்க்கலாம்.

சந்திரனை தவிர மற்ற கிரகங்களில் பூமிக்கு மிக அருகாமையில் இருப்பது சுக்கிரன்.  வெகுதொலைவில் இருப்பது சனி.  சுக்கிரனுக்கென்று நிழல் இருந்தாலும் அது பூமி மீது அதிகமாக விழுவதில்லை.  சுக்கிரன் அளவில் மிக சிறியதாகி போனதால், சூரியனை மறைத்து பெரிய அளவில் உருவாகும் நிழலை கொண்டதாக இல்லை.  சனி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே அமையால் வெளிப்புறத்தில் அமைந்து போனதால், அதன் நிழல் வெளிப்புறத்திலேயே விழும்.  பூமி மீது விழ வாய்ப்பே இல்லை.  இருப்பினும் நிழல்கிரகங்களாகிய ராகுவும், கேதுவும், சுக்கிரன், சனி மற்றும் ஏனைய கிரகங்களின் ஒளிக்கதிர்களை பாதிப்படைய செய்கிறன.  சனியிலிருந்து வரக்கூடிய முழுமையான சனிக்கதிர்கள் நமக்கு பெரும்பாலும் கெடுதலையே செய்கிறது.  இந்த சனிக்கதிர்கள் பூமியை வந்தடையும் போது எந்த தடையும் இல்லாமல் வந்தடையும் போதே கெடுதலை விளைவித்துவிடுகிறது.  சனிக்கதிர்கள் பூமியை வந்தடையும் போது, ராகு, கேது என்று சொல்லகூடிய நிழலுக்குள் புகுந்து நம்மை வந்தடையும் சூழ்னிலையும் வரும்.  இப்படி சனிக்கதிர்கள் நிழலுக்குள் புகுந்து வரும்போது, அவை சிதறலடைந்து, ஒழுங்கற்ற முறையில் நம்மை வந்தடையும் போது கெடுதல் இன்னும் அதிகரிக்கும்.  இந்த கெடுதல்கள் நிழல்களின் தன்மை, இயல்புக்கேற்றவாறு மாறுபடும்.  இந்த மாற்றங்களால் நமக்கு விளையும் தீமைகளே கிரகணதோஷம் எனப்படுகிறது.  சுக்கிரகதிர்களால் விளையவேண்டிய நன்மைகள் கூட இந்த நிழல்களுக்குள் புகுந்து வரும்போது, ஒழுங்கற்ற முறையில் சிதறடிக்கப்பட்டு, நம்மை வந்தடையும் போது அது கெடுதலை செய்து விடுகிறது.  இதே நிலையே மற்ற கிரகங்களுக்கு ஏற்படுகிறது.

கிரகங்களின் கதிர்கள், ராகு, கேதுக்குள் புகுந்து வர வேண்டுமானால், ராகு அல்லது கேது, அந்த கிரகங்களோடு ஜாதகத்தில் மிக நெருங்கி இருக்க வேண்டும்.  இதற்கு முன் சொல்லப்பட்ட பாகையையே அளவாக கொள்ளலாம்.  ராகு, கேதுக்களுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தாலும், பாகை அளவில் நெருங்கியிராமல், தொலைவாக விலகி இருந்தால், அந்த கிரகங்களின் கதிர்கள் ராகு, கேது எனப்படும் நிழலுக்குள் புகாமல் நம்மை நேரடியாக வந்தடைந்துவிடும்.  அப்போது கிரகணதோஷம் விளையாது.  சில ஜாதகங்களில் இந்த ராகு, கேதுவும், மற்ற கிரகங்களும் அடுத்தடுத்த ராசிகளில் இருக்கும்  ஆனால் பாகை அளவில் மிக நெருங்கியிருக்கும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில் கிரகணதோஷம் விளைந்துவிடும்.  இப்படி ராகு, கேதுக்கள் மற்ற கிரகங்களுடன் கொள்ளும் தொட்ர்பை துல்லியமாக ஆராய்ந்து பலன் சொன்னால் அது சரியாக இருக்கும் என்பது என் கருத்தும், என் குருனாதர் உபதேசமுமாகும்.  இதை விடுத்து ஒரே ராசியில் ராகு, கேதுவுடன் எந்த கிரகம் இருந்தாலும் அது கிரகணதோஷம் என்று முடிவுக்கு வருவது தவறாகிவிடலாம்.  ஜோதிடம் என்பது பழைமையான சாஸ்த்திரம் மட்டுமல்ல.  புதுமையான அறிவியலையும் தன்னகத்தே கொண்டது.  இதை உணர்ந்து, அதற்குரிய பலன் சொல்லும் ஜோதிடர்களே வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.  நன்றி.  வணக்கம்.    

கிரஹண தோஷம் பற்றிய பதிவு எண் 01.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.  : .....  கிரஹண தோஷம் பற்றிய பதிவு எண் 01.  : .......  பார்மபரிய முறை.  : .....  பொதுவாக நிழல்கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் அது கிரகண தோஷம் என்று சொல்லப்படுகிறது.  இதற்குரிய பலனாக, நிழல்கிரகத்துடன் எந்த கிரகம் இணைதிருக்கிறதோ, அதன் இயல்பான பலன் கெட்டுப்போகிறது என்றும் சொல்ல்ப்படுகிறது.  இன்னும் சொல்லப்போனால், கிரகண தோஷம் அடைந்த கிரகங்கள் எதுவுமே நற்பலன் தருவதில்லை, என்று சொல்லப்படுகிறது.   " எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ", என்பதற்கேற்ப மேற்கூறப்பட்டவைகளை பற்றி சற்று சிந்திப்போம்.  முதலில் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொண்டால், அவைகளுக்கு விடை தேடும்போது பல உண்மைகள் நமக்கு புரிய வரும்.

01.  நிழல்கிரகங்களுடன் ஒரே ராசியில் சூரியன் சந்திரன் இருந்தாலும், கிரகணம் ஆவதில்லை.  இப்படியிருந்தாலும் அதை தோஷம் என்று கொள்ளலாமா?  கிரகணம் இல்லாதபோது, சூரிய, சந்திரர்களின் ஒளி நமக்கு முழுமையாக கிடைக்கிறது.  அப்படியென்றால், இவ்விரு கிரகங்களின் முழ் சக்தியும் தடையின்றி முழுமையாக நமக்கு கிடைப்பதாகத்தானே பொருள்.  இது எவ்வாறு? தோஷமாகும்?

02.  ஒரு ராசியின் ஆரம்பத்தில் ஒரு கிரகமும், அந்த ராசியின் முடிவில் நிழல்கிரகமும் இருந்தால் இதை கிரகணதோஷம் என்று கொள்ளலாமா?  அப்படியென்றால், இவ்விருகிரகங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 22 பாகைகளாவது இடைவெளி இருக்கும்.  அடுத்தடுத்த ராசிகளில் இவ்விரு கிரகங்களும் இருந்து, பாகை அளவில் நெருங்கி இருந்தால், அதாவது குறைந்த பட்சம் 5 பாகை வரை நெருங்கியிருந்தாலும், அடுத்தடுத்து ராசிகளில் இருப்பதால் கிரகணதோஷம் விளையாதா?

03.  கிரகண தோஷம் அதிக பாதிப்பை தரும் என்றால், பழம்பெரும் ஜோதிட சாஸ்த்திரங்களின் மிக சிறந்த தொகுப்பாகிய " பிருஹத் ஜாதகம் ", கிரகண தோஷத்தையோ, அல்லது நிழல்கிரகங்களையோ பற்றி ஏன் எடுத்துக்கூறவில்லை?  இந்த சிந்தனைகளோடு கட்டுரையை தொடரலாம்.

சூரியன் இயற்கையில் தானாகவே ஒளிரக்கூடியது.   இந்த ஒளிக்கதிர்கள், சந்திரன் முதல் சனி வரையிலான எல்லா கிரகங்கள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது.  நமக்கு மிகவும் அருகாமையில் இருந்தபடி பிரதிபலிப்பது சந்திரன்.  வெகுதொலைவில் இருந்தபடி பிரதிபலிப்பது சனி.  இப்படி சூரிய ஒளி பிரதிபலிக்கப்படும் போது, அந்தந்த கிரகங்களின் இயல்பான தன்மைகள், ஒளீயாக பிரதிபலிக்கப்பட்டு, நம்மை வந்தடைகிறது.  பூமியும் சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது.  மற்ற கிரகங்களின் பிரதிபலிப்பை, நாம் பூமியிலிருந்து காண்பது போல், பூமியின் பிரதிபலிப்பை மற்ற கிரகங்களிலிருந்து காணமுடியும்.  ஒரு திடப்பொருள் மீது ஒளிக்கதிர் படுகிறது என்றால், அந்த திடப்பொருளின் மறுபுறம், அப்பொருளின் நிழல் இருக்கும்.  அது போல் சூரியனின் ஒளிக்கதிரை பெறுகிற எல்லாகிரகங்களுக்கும் நிழல்கள் உண்டு.  சந்திரனின் நிழலையும், பூமியின் நிழலையும் நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது.  உணரமுடிகிறது.   சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது விழுவது பூமியின் நிழல்.  சூரிய இக்ரகணத்தின் போது பூமியின் மீது விழுவது சந்திரனின் நிழல்.  இப்படிப்பட்ட நிழல்களால் பூமியில் இருக்கக்கூடிய ஜீவராசிகளுக்கு உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் உருவாகிறன.  இந்த மாற்றங்களால் தீமை விளைவதால், இதை தோஷம் என்று சொல்கிறோம்.  இது கிரகண நேரத்தில் விளைவதால் கிரகண தோஷம் என்று சொல்கிறோம்.   இப்படிப்பட்ட நேரத்தில் பிறந்த ஒருவரது ஜாதகத்தில், சூரியன், சந்திரன், நிழல்கிரகங்கள் ஆகியன மிக நெருக்கமான பாகையில் அமைம்திருக்கும்.  சந்திரகிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் நிழல் கிரகங்களுடன் இணைந்து சமசப்தமமாக இருக்கும்.  சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது இம்மூவரும் மிக நெருக்கமான பாகையில் இருப்பர்.  எழுதப்படும் மூல ஜாதகங்களில் இந்த கிரகண குறிப்பை அவசியம் எழுத வேண்டும்.  ஆனால் எழுதப்படுவதில்லை.  எனவே மேற்கண்ட கிரகண நிலைகளை வைத்து யூகித்தறிய வேண்டியிருக்கிறது.

இதில் சிக்கல் என்னவென்றால், மேற்கண்ட கிரகனிலைகள் இருந்தாலும், பல சமயங்களில் கிரகணம் விளையாமல் போகிறது.  இப்படி கிரகணம் விளையாத போது, சூரியனுடைய ஒளி வழக்கம்போல், நமக்கு முழுமையாகவே கிடைத்துக்கொண்டிருக்கும்.  அதுபோல் சந்திரனுடைய ஒளியும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.  இப்படி முழுமையாக ஒளி கிடைக்கும் போது அது எவ்வாறு கிரகணதோஷம் ஆகும்? என்ற ஒரு நியாயமான கேள்வி நம்முள் எழுகிறதல்லவா!   இன்னும் விரிவான சிந்தனைகளோடு அடுத்தபதிவில் சந்திப்போம்.  : ..........  தொடரும் ;: ..............   

Sunday 23 October 2016

" சுகஸ்தானமும், நோய்களும் ",



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  " சுகஸ்தானமும், நோய்களும் ",  : ..........  பாரம்பரிய முறையிலான பதிவு.  ஜாதக கட்டத்திலுள்ள 4 ஆம் ஸ்தானத்தை சுகஸ்தானம் என்கிறோம்.  இந்த ஸ்தானம் கெட்டால் சுகக்கேடு விளையும் என்பது எல்லோர் கொள்கை.  சுகம் கெட்டால் என்னாகும்?  நோய் வரும்.  எனவே சுகஸ்தானம் கெடுவது நோய்க்கான அறிகுறி என்பது பலர் முடிவாக இருக்கிறது.  மேலோட்டமாக பார்த்தால் இதுவே உண்மை எனவும் நமக்கு தோன்றுகிறது.  சுகஸ்தானம் கெட்டு, அதன் மூலம் நோய்கள் வரும் என்றால், நம் ஜோதிட ஞானிகள், 6, 8 என்ற இரு ஸ்தானங்களை பற்றி விரிவாக சொல்லியிருக்க மாட்டார்கள்.  அதற்கு அவசியமென்ன?  6. 8 என்ற ஸ்தானங்களோடு தொடர்புடைய கிரகங்களின் காரகத்துவங்களை கொண்டு நோய்கள் இன்னதென்று விதி வகுத்தவர்கள், 4 ஆம் ஸ்தானத்திற்கு அவ்வாறு ஒரு விதி முறையை வகுக்காதது ஏன்? என்றெல்லாம், சிந்திக்கும் போது,  சுகம், சுகக்கேடு மற்றும் நோய்கள் என்ற இவ்விரு சொற்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் வகையில், ஏதோ ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது.  அதனால், 4 மற்றும் 6. 8 ஆகிய ஸ்தானங்களுக்கிடையேயும் ஏதோ ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது என்ற உணர்வு நமக்கு நிச்சயமாக வரும்.

நல்லதோ, கெட்டதோ, தன்னுடைய மனம் எதை விரும்புகிறதோ? அதை தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதும், அதனால் மனமகிழ்ச்சி அடைவதும் அனுபவிப்பவரை பொறுத்தவரை அது சுகம் ஆகும்.  இதில் நல்ல சுகம், கெட்ட சுகம் என்று இருவகை உண்டு.  சுபஸ்தானாதிபதிகள், சுகஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல சுகம் கிடைக்கும்.  அதனால் அவர் மனமகிழ்ச்சி அடைகிறார்.  சுபஸ்தானாதிபதி, பகை, நீசம் அடைந்தால் அதில் தடை ஏற்படுகிறது.  உதாரணத்திற்கு, 2 ஆம் அதிபதி சுகஸ்தானத்தில் இருந்தால், ஜாதகர் தான் விரும்பும் உணவுகளையெல்லாம், உண்டு மனமகிழ்ச்சி அடைவார்.  2 ஆம் அதிபதி சனியானால், ஜாதகர் எண்ணெயில் பொரித்த சுவையான அசைவ உணவுகளை உண்டு மகிழ்வார்.  அதில் ஒரு சுகம்.  இத்தகைய உணவுகளால் ஜீரண மண்டல உறுப்புகளில் நோய் வந்து அவதிப்படுபவர்களும் உண்டு.  அதுபோல் எவ்வித இடையூறுமின்றி இறக்கும் வரை நன்றாக வாழ்ந்தவர்களும் உண்டு.  சனியின் சாரனாதன் குருவாகி, அவர் அஷ்டமத்தில் இருந்தால், நிச்சயம் ஜீரண மண்டல உறுப்[புகளில் நோய் வரும்.  கொழுப்பு அதிகமாகி ரத்த அழுத்தமும் வரும்.  இதுவே சாரனாதனாகிய குரு லாபத்தில் இருந்தால், வாழ்னாள் முழுதும் மேற்கண்ட உணவை உண்டு மகிழ்வதில் மன்னனாக இருப்பார்.    அடிக்கடி மது அருந்தும் ஒருவர், நீண்ட காலம் நல்ல முறையில் வாழ்வதும், எப்போதாவது அருந்துபவர், வயிற்று புற்றால் அவதிப்பட்டு அகால மரணம் அடைவதும், மேற்கண்ட ஸ்தானங்களின் செயல்பாடுகளே.  எனவே சுகஸ்தானம் அடையாளம் காட்டுவது ஜாதகர் அடையும் மனச்சுகம்.  6. 8 ஆகிய ஸ்தானங்கள் அடையாளம் காட்டுவது ஜாதகர் அடையும் உடற்சுகம்.  அதாவது நோய்கள்.  புகையிலை மெல்லுவது, மூக்குப்பொடியை பயன்படுத்துவது ஆகியன ஒருவருக்கு மனசுகத்தை தரலாம்.  அதுவும் அது கெட்டசுகமாகும்.  இதன் விளைவாக சம்பந்தப்பட்ட நோயை தருவதும் தராததும் 6. 8 என்ற ஸ்தானங்களின் அமைப்பு.  இதைபற்றி ஒரு சில கிரக அமைப்புகளோடு சற்று விரிவாக பார்ப்போம்.  : ...............

மீனலக்னம்.  விரயாதிபதி சனி 4 ஆமிடம் குரு சாரம்.  குரு அஷ்டமம்.  சுயசாரம்.  இந்த அமைப்பு உடைய ஜாதகர் தாங்கொணாத அளவுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்.  எவ்வாறு?  விரிவாக பார்ப்போம்.  விரயாதிபதி சனி 4 ல்.  விரயம் அசுபஸ்தானம் என்பதால் ஜாதகர் அடைவது கெட்ட சுகம்.  அத்துடன் விரயம் செலவையும் குறிக்கும்.  சனியின் காரகத்துவம் இறைச்சி.  குருவின் காரகத்துவம் கொழுப்பு.  அஷ்டம காரகத்துவம் நோய்.  அஷ்டமத்தில் குரு இருந்தால் ஆயுள் குறைவு.  ...................  இவைகளையெல்லாம் ஒன்றிணைத்தால்..........................  ஜாதகர் அசைவ விரும்பி.  இதற்காகசெலவுகள் செய்ய தயங்கமாட்டார்.  சனியின் இருப்பிடம் நட்பு.  எனவே மிகவும் விரும்பி, அளவுக்கதிகமாகவே இறைச்சி வகையறாக்களை உண்ணுவார்.  இது ஜாதகருக்கு சுவைசுகம்.  ஆனால் சாஸ்த்திரப்படி கெட்டசுகம்.  இந்த கெட்ட சுகத்தை அனுபவிப்பதால், கொழுப்பு அதிகமாகி, அதுவே உயர் ரத்த அழுத்தமாகி, ஆயுளை குறைத்து அகால மரணத்தை தந்துவிடும்..  இந்த கிரக நிலையை நாம் வேறுவகையிலும் அணுகலாம்.  ;;;;;;;;;;;;;;;;;;;  லக்னாதிபதி குரு அஷ்டமத்தில் சுயசாரம்.  லக்னாதிபதி அஷ்டமத்தில் பகையானதால் ஆயுள் குறைவு.  மேலும் அஷ்டமத்தில் குரு இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படும்.  அதாவது ஜீரணமண்டல கோளாறுகள், மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிப்புகள் வரும்.  இதே கிரக அமைப்புகளோடு, இந்த சுகஸ்தானத்தை வேறு வகையில் அணுகி பார்க்கலாம். : ......................  லாபம் எனக்கூடிய சுபஸ்தானாதிபதி சனி, சுகம் எனக்கூடிய சுபஸ்த்தானத்தில் இருப்பதால், ஜாதகர அனுபவிக்கும் சுகம் நல்ல சுகமாக இருக்கும்.  அதாவது நல்ல வருமானம் தரும் தொழிலில் கடுமையாக உழைத்து, தேவையான தூக்கத்தை நிம்மதியாக பெறுவார்.  இது நல்ல சுகம்.  சாராதிபன் அஷ்டமத்தில் இருப்பதால், வருமானத்தையும் மீறிய நிதிப்பற்றாக்குறையால் கடன் இருந்துகொண்டே இருக்கும்.  இதை இன்னொரு வகையிலும் அணுகலாம்.  லக்னாதிபதி குரு அஷ்டமத்தில் பகை என்பதால் வாழ்னாள் முழுதும் நிதிப்பற்றாக்குறையால் கடன் இருக்கும்.  இதே குரு தொழில் ஸ்தானத்துக்கும் அதிபதியாகி, அஷ்டமத்தில் இருப்பதால், தொழிலுக்காக ஜாதகர் கடன் வாங்கியே தீர வேண்டும் என்ற நிலையை காட்டுகிறது.

சுகத்தில் நல்ல சுகம், கெட்டசுகம் இருப்பதுபோல் நோயில் நல்ல நோய், கெட்ட நோய் என்று கிடையாது.  நோய் என்றாலே கெடுதல் தான்.  இதிலிருந்து, சுகஸ்தானத்திற்கும் நோய்களை குறிக்கும் ஸ்தானங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ளலாம்.  இப்படி நாம் ஆராயும் எண்ணத்தோடு ஸ்தானங்களை பற்றி சிந்திக்கும்போது, அதனுள் ஒளிந்திருக்கும் வேறுபாடுகளையும் சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடியும்.  ஆனால் இந்த ஆய்வுகள் எல்லாம் ஜோதிட விதிமுறையோடு ஒத்துப்போகவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடோடு ஆராயவேண்டும். அதற்குரிய நல்ல ஞானத்தை குருவருளும், இறையருளும் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்வோமாக.  நன்றி.  வணக்கம்.     

" குழந்தை ஜாதகமும் பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை. ............ 01



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம்.  " குழந்தை ஜாதகமும் பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை.  ஜோதிடர்களுக்கான பதிவு.  பாரம்பரிய முறை.  : .........  குழந்தையின் ஜாதகம் 12 வயது வரை செயல்படாது.  இது பொது மக்களிடையே நம் ஜோதிடர்களில் சிலர் பரப்பி விட்டிருக்கும் செய்தி.  முதல் 4 வருஷங்கள் தாயின் ஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  அடுத்த 4 வருஷங்கள் தந்தையின் ஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  இதற்கடுத்த 4 வருஷம் தன் சுயஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  இது ஜோதிடர்களில் சிலர் சாஸ்த்திர விதியென கூறுகிறார்கள்.  ஆனால் இந்த ஜோதிட விதிக்கு ஜோதிடர்களிடையே பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதே உண்மை.  நமக்கு ஜோதிடம் சொல்லித்தரும் முன்னணி சாஸ்த்திரனூல்களில் இந்த ஜோதிட விதிகள் இல்லை.  எனவே இந்த விதிகளுக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது.  மேலும் 12 வயதுவரை குழந்தை ஜாதகம் செயல்படாது என்று சொல்லிவிட்டு, 8 ஆவது வயது முதல் 12 ஆவது வயது வரை சுய ஜாதகம் செயல்படும் என்றும் சொல்கிறார்கள்.  இந்த முரண்பாடு ஏன்?  இப்படிப்பட்ட முரண்பாடுகளால் மனதில் பல கேள்விகள் முளைக்கிறன.

முதலில் தாய் ஜாதகம், பின் தந்தை ஜாதகம், பின் சுயஜாதகம் செல்லுபடியாகும் என்றால் 12 வயதுக்கு பின்பு யாருடைய ஜாதகம் செல்லுபடியாகும்?  8 வயதுக்கு மேல் சுயஜாதகம் செல்லுபடியாகும் என்றால், நேரடியாக, 8 வயதுவரை குழந்தையின் ஜாதகம் செயல்படாது என்று சொல்லியிருக்கலாமே!  ஏன் அவ்வாறு சொல்லவில்லை?  : ................  தாய்க்கோ அல்லது தந்தைக்கோ ஜாதகம் இல்லையென்றால், யாருடைய ஜாதகம் வைத்து குழந்தைக்கு பலன் அறிவது?  குழந்தை பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டால், முதல் 4 வருஷங்களுக்கு குழந்தைக்கு எந்த ஜாதகம் வைத்து பலன் பார்ப்பது?  குழந்தையின் ஜெனன ஜாதகம் வைத்து, தாய், தந்தை, தாய்மாமன், உடன்பிறந்தார், சித்தப்பா, சின்னமா, அத்தை ஆகியோரைபற்றி அறியலாம் என்ற வகையில் ஜோதிட விதிகள் இருக்கிறதே.  இவற்றை பயன்படுத்துவதா? அல்லது வேண்டாமா?  இவைகளில் ஏதாவது நுட்பமான ஜோதிட சூட்சுமம் ஒளிந்திருக்கிறதா?  ஒரு தந்தைக்கு இரு குழந்தைகள் இருந்து, அவைகளுக்கு முறையே 5. 7 வயது என்றால், தந்தையின் ஜாதக கர்மவினை எந்த குழந்தையை பாதிக்கும்?  இரட்டை குழந்தைகள் பிறந்து வாழும் போது, இரு வேறு அனுபவங்களை பெறுகிறன என்பது உண்மையானால், மேற்கண்ட விதி எந்த அளவுக்கு சாத்தியம்?  பெற்றோரின் கர்மவினைகளை 8 வயதுவரை குழந்தை அனுபவிக்கும் என்றால், பெற்றோர்கள், அவரவர்கள் ஜாதக கர்மவினைப்படி,  துன்பம், துயரம் ஆகியவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்போதோ அல்லது வேற்றிடத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலோ, அந்த குழந்தைகள் நலமுடன் மகிழ்ச்சியாக இருப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.  இதன் பொருளென்ன?  இனி ஜோதிட சாஸ்த்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ள ஒரு சில ஜோதிடவிதிகளை சிந்தித்தோமானால், மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஜோதிட சாஸ்த்திர நூல்களிலேயே மிகமிக எளிதானதும், ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு முதல் புத்தகமாகவும் விளங்கும் " குடும்ப ஜோதிடம் ", என்னும் நூல் பாலாரிஷ்ட விதிகளை தொகுத்து தருகிறது.  குழந்தைபருவத்தில் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் என்பதே பாலாரிஷ்டத்தின் தமிழாக்கம் ஆகும்.  இன்னூலில் உள்ள விதிகளில் ஒன்று : .................  லக்னத்திலிருந்து 4 குடையவன் 8 ல் இருந்தால், அவமானமுள்ள தாய், அல்லது ஜாதகனுக்கு தாயினால் அவமானம் ஏற்படும்.  : ...............  இதன் விளக்கமாவது.  ..........  4 ஆமிடத்தின் காரகத்துவம் தாய்.  8 ஆமிடத்தின் காரகத்துவம் அவமானம்.  ஜாதகம் குழந்தையினுடையது என்பதால், குழந்தையின் தாய், குழந்தைக்கு அவமானத்தை தேடித்தருவாள்.  இது பொதுவான பலன்.  எத்தகைய அவமானம் என்றறிய சாரம், மற்றும் 8 க்குடையவன் இருக்குமிடம் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.  தாய் அவமானமுடையவளாக இருப்பாளா? என்று அறிய, குழந்தையின் ஜாதகத்தில் " பாவத்பாவ " முறைப்படி பலன் விளைகிறதா? என்று பார்க்க வேண்டும்.  அதற்கு தாய்காரகன் யார்? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.  குழந்தை பகலில் பிறந்திருந்தால் சுக்கிரனும், இரவில் பிறந்திருந்தால் சந்திரனும் தாய்க்காரகர்களாவர்.  மேலே சொல்லப்பட்ட விதி சுருக்கமானது என்பதாலும், ஜோதிடம் பயில்பவர்களுக்கானது என்பதாலும், நாம் எதிர்பார்க்கும் நுட்பங்கள் அதில் கொடுக்கப்படவில்லை.  மேற்கண்ட விதியின் மூலம், தாய், குழந்தை இருவரின் நிலை என்னவென்று அறிய குழந்தை ஜாதகமும் வேண்டும் என்று புரிந்துகொள்ளலாம்.

அதே நேரம் தொழில்முறை ஜோதிடர்கள், இந்த விதியையும் பலனையும் இதோடு நிறுத்திக்கொள்வதில்லை.  தாயின் ஜாதகத்தையும் கவனிப்பர்.  தாயின் ஜாதகத்தில் லக்னாதிபதி அஷ்டமத்தில் இருந்தால் தாய்க்கு அவமானம் நேரும்.  எனவே தாய் அவமானமுள்ளவளாகிறாள்.  அத்துடன் தாய் ஜாதகப்படி புத்திர காரகன் குரு.  எனவே குரு இருக்குமிடத்தை லக்னமாக கொண்டு, குழந்தைக்கு தாயால் அவமானம் நேருமா என்றும் பார்க்க வேண்டும்,  இப்படி இருவழிகளிலும் உறுதியாகும் போது, நாம் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வர முடிகிறது.  அதற்கு குழந்தையின் ஜனன ஜாதகமும் அவசிய தேவையாகிறது என்பதையும் உணரமுடிகிறது.  ................  நாம் கலந்துரையாடல் இன்னும் இருக்கிறது.  அடுத்த பதிவில் தொடர்வோம்.  .................